கெஹலியவுக்கு எதிராக மீண்டும் பிரேரணையாம் – ஐக்கிய மக்கள் சக்தி திட்டம்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கெஹலிய ரம்புக்வெலவை, அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் தெரிவித்த்தனர்.

கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக இருந்தபோது அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்தது. எனினும், அது தோற்கடிக்கப்பட்டது. ஆனால், கெஹலிய ரம்புக்வெலவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, அது ரமேஷ் பத்திரனவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தபோதிலும் கெஹலிய ரம்புக்வெல அமைச்சரவையில் சுற்றாடல் துறை அமைச்சராக நீடிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.