கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அவர்களில் 589 பேர் போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 733 சந்தேக நபர்களில் 144 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருளுக்கு அதிக அடிமையாக இருந்த 4 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 130 கிராம் ஹெரோயின், 159 கிராம் ஐஸ், 1725 கிலோ கஞ்சா, 900 கிராம் கஞ்சா, 5 கிலோ 525 கிராம் மாவா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.