இம்ரான் தபால் மூலம் வாக்களித்தார், மனைவி வாக்கு இழந்தார்.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறையில் உள்ளதால் பாகிஸ்தானில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் ராவல்பிண்டி சிறையில் இருந்து தபால் ஓட்டுப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கட்சியின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேஷி உட்பட ஏனைய அரசியல்வாதிகள் குழுவும் தபால் மூல வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தபால் வாக்குகளைப் பயன்படுத்த இம்ரானுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பாகவே தபால் வாக்குப்பதிவு முடிந்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.