பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நவாஸ் கட்சி, அடுத்த அரசாங்கத்தை அமைக்க போட்டிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி முடிவுகளின்படி, மொத்தமுள்ள 266 நாடாளுமன்றத் தொகுதிகளில் 101 இடங்களை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சுயேச்சை வேட்பாளர்களும், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பில்வால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மேலும் கராச்சியை சேர்ந்த முத்தாய்பா குவாமி இயக்கம் 17 இடங்களில் வெற்றி பெற்று அடுத்த ஆட்சியை அமைக்கும் தீர்க்கமான கட்சியாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.