3 சிறுமிகளை பாலியல் இச்சைக்கு தூண்ட முயன்ற காமுக ஆசிரியர் கைது
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2024/02/1707982120-Arrested_L.jpg)
ஹட்டன்: வட்டவளை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர், 3பாடசாலை மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தூண்ட முயன்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் , இன்று (15) வட்டவளை பொலிஸார் ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 பாடசாலை மாணவிகளை உடலுறவு கொள்ள தூண்டும் நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பியமை நிரூபணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், மாணவிகள் அவரை உடனடி செய்தி நெட்வொர்க்கில் இருந்து அகற்றிய போது, ஆசிரியர் மாணவிகளை மயக்குவதற்காக, அவர்களின் நாற்காலிகளில் இச்சைகளை தூண்டும் வசனங்களை எழுதியுள்ளார்.
44 வயதான இந்த விஞ்ஞான ஆசிரியர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் , அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன கமகே தலைமையில் பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.