இஸ்ரேலில் இருந்து லெபனானுக்கு ஏவுகணை தாக்குதல்.

ஹிஸ்புல்லா அமைப்பின் ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர் தமது அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் ஹிஸ்புல்லாஹ்வின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஏவுகணை தாக்குதல் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் பல ஏவுகணைகள் வீசப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.