2 கோடி உறுப்பினர்கள் இலக்கு: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு!

நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை அருகே பனையூரில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் உள்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தின் முடிவு குறித்து கட்சித் தலைமை வெளியிட்ட அறிக்கை:

“நம் தலைவரின் ஆணைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.

நமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவரின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள, புதிய வாக்காளர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட வாக்காளர்கள் அனைவரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ரீதியாகவும், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகவும் புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட, சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் தொடர்புடைய வாக்காளர் பட்டியலின் நகலை முறைப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாவட்ட, சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்கள், தங்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். பூத் கமிட்டி அமைத்து, பூத் வாரியாக வாக்காளர்களில் கட்சி சார்புள்ளவர்கள் யார்? யார்? எந்தக் கட்சியையும் சாராதவர்கள் யார்? யார்? என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது தலைவரின் உத்தரவின் பேரில், மாவட்ட, சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை ஏற்றுச் செயல்படுவதைக் கடமையாகக் கருத வேண்டும்.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

சுகாதார அமைச்சருக்கும் , தொழிற்சங்கங்களுக்குமான கலந்துரையாடல் வெற்றிபெறவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்தம்!

மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!

ரணில் , நினைப்பது போல் தந்திரமானவர் இல்லை – அனுர.

அமலாக்கத்துறை சம்மனை 6-வது முறையாக நிராகரித்த கேஜரிவால்!

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம்

எமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 10,000 இந்திய வீட்டு திட்டம், இன்று ஆரம்பிக்கப்படுவதை வரவேற்கிறோம். இவை 7 பேர்ச் வீடுகளா? 10 பேர்ச் வீடுகளா என்பதை அரசாங்கம் கூற வேண்டும் -மனோ கணேசன்.

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை இன்று ஆரம்பம்.

மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.

நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் சட்டப்பூர்வமாக செல்லாததாகிவிடும் : ஜீ.எல்.

Leave A Reply

Your email address will not be published.