கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் கொலை!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்குருகொட சந்தியின் கால்வாய்க்கு அருகில் தலையில் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ருவன் குமார என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.