5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

5 1/2 மாத குழந்தையை வாடகை அறையில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற இளம் தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலஹா லுல் கந்துர தோட்டத்திலுள்ள , லைன் அறையில் பச்சிளம் குழந்தையை தனியாக விட்டுச் சென்ற தம்பதிகள் , கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இருந்து தற்காலிக வதிவிடமாக தங்க வந்ததாகவும், அவர்கள் வரும் போது அந்த லைன் அறையில் வசித்து வந்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (22) அந்த லைன் அறையில் வசிக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட தம்பதிகள் , தாங்கள் வெளிநாடு செல்வதால் அறையில் விட்டு வந்த குழந்தையை பார்த்துக் கொள்ள யாரையாவது ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.

இது தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து , குடும்ப நலப் பணியாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அறையில் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டுள்ளார். பின்னர் குடும்ப நலப் பணியாளரால் குழந்தையை தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தெல்தோட்டை வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் வசதிகள் இல்லாத காரணத்தினால் , குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும், சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலஹா தெல்தோட்டை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கபில அத்தபத்து தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கஹல பொலிஸார், தம்பதியினர் உண்மையில் வெளிநாடு சென்றனரா அல்லது வெளிநாடு செல்லும் போர்வையில் நாட்டில் எங்காவது மறைந்து இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே! – ஹரின் புகழாரம்; சஜித் அணிக்கும் அழைப்பு.

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வாள்வெட்டுக் கும்பல் நபர் , யாழ்.விமான நிலையத்தில் கைது

சிறீதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ்! – ரணில் பகிரங்கமாகத் தெரிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.