புத்தூரில் வீடொன்று தீக்கிரை.

யாழ்ப்பாணம், புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது.

புத்தூர், கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் தீப்பரவியது.

இதையடுத்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகவே வீடு தீப்பிடித்து எரிந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.