அ.இ.ம.கா. கட்சியில் இருந்து முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது! – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறு எனது தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, சிரான் குணரட்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.