யாழில் தனியாா் பஸ் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு இன்று மாலை தீர்வு உறுதி – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் தனியாா் பஸ் உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு இன்று மாலை 6 மணிக்குத் தீர்வு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி வழங்கியுள்ளார்.

போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்த ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பஸ் உாிமையாளா்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பஸ் உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாகப் பேசுவதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநரைச் சந்திப்பதற்காக அழைத்து சென்றார்.

பின்னர் போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகை தந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்துச் சபையினர் மற்றும் தனியாா் பஸ் உாிமையாளா்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதி வழங்கினார்.

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பஸ் உாிமையாளா்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.