சென்னையில் ஏர்டெல் சேவை திடீர் முடக்கம்.. பொதுமக்கள் கடும் அவதி

சென்னையில் நேற்று இரவு முழுவதும் ஏர்டெல் சேவை முடங்கியதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமலும், யுபிஐ மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமலும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் ஏர்டெல் சேவைகள் நேற்று மாலை திடீரென முடங்கின.

அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் இணைய சேவை மாலை 5 மணி முதலே பாதிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பிறகு ஏர்டெல் சிக்னல் முழுமையாக தடைபட்டதால், அவசரத் தேவைக்கு கூட அழைப்புகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர்.

மேலதிக செய்திகள்

சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்களின் அஞ்சலிக்கு : நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்

அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராகிறார் ரணில்..

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Leave A Reply

Your email address will not be published.