அன்னம் சின்னத்தில் பொது வேட்பாளராகிறார் ரணில்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், பொதுக் கூட்டணியின் கீழ் , அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பொது வேட்பாளராக போட்டியிட உள்ளார்.எனவே ஐதேக கட்சியின் யானை சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாமல் , அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். முன்னர் அன்னம் சின்னத்தில் மைத்ரி போட்டியிட்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் மாத இறுதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.