ரஷ்யாவிற்கு இந்தியர்கள் ஆள் கடத்தல் அம்பலமானது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி இந்தியர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் மனித கடத்தலை இந்திய மத்திய புலனாய்வு முகமை கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரும் தொகைக்கு வேலை வாய்ப்பு தருவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வரும் புரோக்கர்கள் மூலம் ஏற்கனவே நாட்டின் பல மாநிலங்களில் இருந்து 35 பேர் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

போரின் நடுவே ரஷ்யாவுக்குச் செல்லும் போது இவ்வாறு ஏமாந்த இரண்டு இந்திய பிரஜைகள் உயிரிழந்ததையடுத்து இந்திய மத்திய புலனாய்வு இந்த கடத்தலை கண்டுபிடித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இந்திய ரூபாய் மாதச் சம்பளம் தருவதாக தரகர்களால் ஏமாற்றப்பட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மாஸ்கோவில் இருந்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்திய புலனாய்வு முகமை அதிகாரிகள் சமீபத்தில் புது தில்லி மற்றும் மும்பையில் 13 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர், அங்கு அவர்கள் நாட்டின் நாணயத்தில் 5 மில்லியன் ரூபாய்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.