வெள்ளவத்தை புகையிரத கடலோரப் பாதையில் ரயில் தாமதம்.

கரையோரப் புகையிரதத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான பகுதியில் ஒரு புகையிரத பாதையின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.