யாழில் விமானப்படைக் கண்காட்சிக்குக் கஞ்சாவுடன் வந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப்படையின் கண்காட்சிக்குக் கேரள கஞ்சாவுடன் வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்குப் பொதியுடன் வந்த பெண்ணைச் சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.