யாழில் காணி மோசடி: பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பகுதியில் மூவருக்குச் சொந்தமான காணியை ஒருவர் காலமான நிலையில், மற்றைய நபர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்குத் தெரியாமல் மற்றையவர் தனது பெயருக்குக் காணியை உரிம மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்து கொண்ட நபர் , தனக்குத் தெரியாமல் தனக்குச் சொந்தமான காணியை உரிம மாற்றம் செய்து மற்றைய நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோசடியான முறையில் காணி உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரைக் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.