வட்டுக்கோட்டையில் பயங்கரம் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை. (பிந்திய இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் நேற்று (11) யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை,  உயிரிழந்தவர் சில காலத்திற்கு முன்னர் வாளால் வெட்டிக் காயப்படுத்தியிருந்தார் என அறியமுடிகிறது.

அதற்கு பழிவாங்கும் வகையில் காயமடைந்த நபரின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியே , சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவர் வசிக்கும் வட்டுக்கோட்டை கிராமத்தில் வைத்து வாள்  வெட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.

வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே  உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கொலையாளி அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னைய செய்தி

மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டநிலையில்அந்தகுடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வட்டுக் கோட்டை மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் வயது 23 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் , பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர்.

இதன் போது இருவரும் தம்பித்து கடற்படை முகாமுக்குள் நுழைந்த போது , கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டிய நிலையில் , வெளியே வந்தவர்களில் , மனைவியை ஒரு காரிலும் , குறித்தநபரை அடுத்த காரிலும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றுள்ளதாக அறிய முடிகிறது

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டுள்ளனர். மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்ற நிலையில், குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் கடத்தப்பட்டவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழ் தூக்கி ஏறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

அதை அவதானித்த வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் , இது குறித்து தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி, அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே வுழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளை விசேட பொலிஸ் குழு தேடி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.