கடந்த 24 மணித்தியாலங்களில் 1101 சந்தேக நபர்கள் கைது?

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1030 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவுக்குட்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 1030 சந்தேக நபர்களில் 46 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 17 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 71 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 5 சந்தேகநபர்களும், 63 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், கைரேகைகள் மூலம் 01 கைதுகளும், குற்றங்களுக்காக 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.