செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.

ஹவுதி ஏவுகணைத் தாக்குதல் ஏமன் கடற்கரையில் வணிகக் கப்பலை சேதப்படுத்தியதாக கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏதும் ஏற்படாததால் வணிகக் கப்பலின் பணியாளர்கள் தொடர்ந்து பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலையும் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்க அனுமதிக்க மாட்டோம் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதோடு, எதிர்காலத்தில் தமது தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த மாதத்தின் முதல் பாதியில், ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலால் ஏடன் கடலில் வணிகக் கப்பல் தீப்பிடித்து, மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். மற்ற குழுவினர் கப்பலை விட்டுவிட்டு தப்பித்து தங்கள் உயிரைக் காப்பாற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.