வவுனியாவில் இன்றைய போராட்டத்தில் இணைந்துகொள்ள வருமாறு கைதானோரின் உறவினர்களும் அழைப்பு!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரை பொலிஸார் அராஜகமாகக் கைது செய்து, பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியதையடுத்து அவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அவர்களில் 5 பேர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.