சவால்களை ஏற்க முடியாத தலைவரிடம் நாட்டை ஒப்படைத்தால் என்ன நடக்கும்?- பிரசன்ன ரணதுங்க

சவால்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு தலைவரால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது எனவும், வேட்பாளர்கள் ஏராளமாக இருந்தும் சவால்களை வென்ற தலைவருக்கு சந்தர்ப்பம் வழங்குவதில் தவறில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யார் அலை வீசினாலும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு ஆதரிக்கும் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என அமைச்சர் தெரிவித்தார்.

மொட்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை சரியான நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கம்பஹா நைவல பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.