கோட்டை நீதவான் திலின கமகேவை கொல்ல முயற்சி?

கைக்குண்டுகளை பயன்படுத்தி , கோட்டை நீதவான் திலின கமகேவை கொல்ல இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர் திட்டமிட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரையின் பிரகாரம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அரச உளவாளி ஒருவருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நீதவான் திலின கமகேவை கொல்வதற்காக குறித்த நபர் தொலைபேசி ஊடாக கைக்குண்டு ஒன்றை பெற முயன்றமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.