முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னதாக தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி, விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தென்காசி, தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

இதனிடையே, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார்.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கின்றனர்.

மேலதிக செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளராக நாமல் போட்டியிட்டால் முழு ஆதரவு! – மொட்டு எம்.பி. வீரசிங்க கூறுகின்றார்.

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; குறைந்தது ஒன்பது பேர் பலி.

எந்த அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார்! – முல்லைத்தீவில் சஜித் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலும் , பொதுத் தேர்தலும் ஒரே நாளில் : அவர்களுக்கு முக்கியம் அவர்களது எதிர்காலம் : உதய கம்மன்பில

அரவிந்த் கெஜ்ரிவால் கைது.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்

குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்; திறந்து பார்த்து அதிர்ந்த அதிகாரிகள் – அதிர்ச்சி சம்பவம்!

“பொய் புரளியை கிளப்பி வாக்கு வாங்க நினைக்கிறார் பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முயற்சிகள் தோல்வி..பசிலின் பலம் பூஜ்ஜியம்.

சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை!

நிதி மோசடி வழக்கில் நடிகை தமிதா கைது! அவரின் கணவரும் சி.ஐ.டியிடம் சிக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.