நிந்தவூர் விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணம்!

அக்கரைப்பற்று, நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முதியவர் சாவடைந்துள்ளார்.

நிந்தவூர், 5ஆம் பிரிவைச் சேர்ந்த 72 வயதுடைய அகமட் லெப்பை மீராலெப்பை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸின் சாரதியை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.