ஜனாதிபதி வேட்பாளர் யார்? நாளை கூடுகின்றது மொட்டு.

ஜனாதிபதித் தேர்தல் உட்பட அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், கட்சியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.

மே தினக் கூட்டம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.