நெளுக்குளம் குளத்தினுள் ஆணின் சடலம் – அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை.

வவுனியா, நெளுக்குளம் குளத்தினுள் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை அடையாளம் காண உதவுமாறு நெளுக்குளம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெளுக்குளம் – குளக்கட்டு பாதையூடாகச் சென்ற நபர் ஒருவர், குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்தார். இதையடுத்து அவர் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புக்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குளக்கட்டின் மேற்பகுதியில் ஒரு சோடி காலணியும் காணப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளைத் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கின்றனர்.

சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலமாகக் காணப்படும் நபர் மஞ்சள் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளார். அவர் 55 இற்கும் 60 இற்கும் இடைப்பட்ட வயதுடையவராக உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.