பெண்களை குறிவைத்த சிட்னி ஷாப்பிங் சென்டர் கொலையாளி.

*சிட்னி ஷாப்பிங் சென்டரில் கத்தியால் குத்திய கொலையாளி குறிப்பாக பெண்களை குறிவைத்துள்ளார். *உயிரிழந்த 6 பேரில் 05 பேர் பெண்கள்… *காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்…

சிட்னியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கத்தியால் குத்திய கொலையாளி , பெண்களை குறிவைத்து கத்தியால் குத்தியதாக நேற்று (15) அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசமே இரங்கல் தெரிவிக்கும் நிலையில், 40 வயதான ஜோயல் கவுச்சி என்ற கொலையாளி, வெஸ்ட்ஃபீல்ட் போண்ட் ஜங்ஷன் ஷாப்பிங் மாலில் தனது வேட்டையின் போது பெண்களை மையமாகக் கொண்டு துரத்திச் சென்றுள்ளார் எனவும் , ஆண்களைத் தவிர்த்துள்ளார் எனவும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து “துப்பறியும் நபர்களுக்கு” இது ஏன் என தெளிவான ஆராய்ச்சி அணுகுமுறையை வழங்கும் என்றும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர் மற்றும் காயமடைந்த 12 பேரில் பெரும்பாலோர் பெண்கள்.

கத்திக்குத்து தாக்குதலில் கடைசியாக பலியானவர் சீன மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். Yixuan Cheng என்ற மாணவி ஆஸ்திரேலியாவில் கற்று வந்துள்ளார்.

கத்திக்குத்தினால் , 38 வயதான தாய் ஆஷ்லே கோட், டவுன் சிங்கிளேடன், ஜேட் யங் (47) , மற்றும் 55 வயதான ஓவியர் பிக்ரியா டார்ச்சியா மற்றும் பாதுகாவலர் ஃபராஸ் தாஹிர் ஆகியோர் இறந்தனர்.

கொலையாளி குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜோயல் கௌச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு , தாக்குதல் நடத்தியவரது செயல்களுக்காக அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்துத்தை தெரிவித்துள்ளனர்.

அண்டை மாநிலமான குயின்ஸ்லாந்தில் வசித்து வந்த Joel Cauchi மீது , இதற்கு முன்னர் அந்த மாநிலத்தில் எந்தவொரு கிரிமினல் குற்றத்திற்காகவும் வழக்குத் தொடரப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ அறிக்கைகளின்படி, அவர் “மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்” என காவல்துறை முன்பு கூறியிருந்தது.

ஆபத்தான நிலையில் கத்தியால் குத்தப்பட்ட 09 மாதக் குழந்தை ஒரு நாள் இரவு முழுவதும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதோடு , தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்படும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.