ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலி – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா, ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் நசீர் அகமது (40), அல்சியா அகமது (10), மொகின் அகமது (6), ரேஷா உன்னிசா (38), இப்ரா அகமது (15), அபித் அகமது (12). இவர்கள் உட்பட 8 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அதன்படி, தண்டேலிக்கு சென்ற குடும்பத்தினர் காளி ஆற்றுக்கு சென்று, தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதில் அவர்கள் மூழ்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றதில் முடியவில்லை. உடனே, தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சடலங்களை மீட்டனர்.

தொடர்ந்து 2 பேரை தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலதிக செய்திகள்

செய்தி வாசித்தபோது மயங்கி விழுந்த பெண் அறிவிப்பாளர்

Leave A Reply

Your email address will not be published.