மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் ஹிங்குராக்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.