விடைத்தாளில் மாணவர்கள் எழுதிய ஜெய் ஸ்ரீராம் – மதிப்பெண்களை வாரி வழங்கிய ஆசிரியர்!

மாணவர்கள் விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் என்று எழுதியத்துக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கியது சர்ச்சையாகியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு பயம் இருக்கும். பொதுவாக தேர்வில் எழுதும் விடைகளின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். குறிப்பாக விடைத்தாளில் சரியான விடையை அளித்திருந்தாலும் ஏதாவது குறையை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டி அதற்கு மதிப்பெண்கள் குறைப்பது தானே வழக்கம்.

ஆனால் ஜான்பூரில் உள்ள உத்தரபிரதேச மாநில பல்கலைக்கழகமான ’வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் விடைத்தாள் முழுக்க ஜெய் ஸ்ரீராம் என எழுதியதற்கு மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான திவ்யன்சு சிங் என்பவர் ஆர்டிஐ-யை தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி, சில மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டன. அப்போது, பார்மசி படிப்பின் விடைத்தாள்கள் முழுக்க ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இடையில் அம்மாணவர்களுக்கு பிடித்த முன்னணி இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் கிறுக்கி வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வினாத்தாளில் கேட்ட கேள்விகளுக்கு உரிய விடை என்று எதுவும் எழுதவில்லை. இருப்பினும் அவர்களுக்கு பேராசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாரி வழங்கியுள்ளனர். இதை முறைப்படி மீண்டு திருத்தியதில், அனைவரும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார்கள்.

ஆர்டிஐ தாக்கல் செய்த முன்னாள் மாணவர், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநருக்கு ஆர்டிஐ விவரங்களை அனுப்பியதோடு, இவை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் ம்பந்தப்பட்ட துறையின் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ரணில்! – பஸில் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுடன் முதல் சந்திப்பு.

26 இலட்சம் பண மோசடி காரணமாக கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்!

மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டம் “ஆபரேஷன் மெனாய் பாலம்” தயாராகிறது

மத்தளை விமான நிலையம் , இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு…

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் – சந்தேக நபர்களின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் இதோ!

சன்னஸ்கலவை கைது செய்தமைக்கு பொலிஸார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த 20 வயதுடைய இளைஞர் கைது.

காசாவின் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு !

விவிபேட் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

Leave A Reply

Your email address will not be published.