மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

மாங்குளம் வசந்தநகர் சந்தியில் இன்று (26) காலை இராணுவ வண்டியொன்று லொறியுடன் மோதிய விபத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

அஹெதுவெவ கல்கமுவ பிரதேசத்தில் வசிக்கும் இராணுவத்தின் 07 ஆவது படையணியில் கடமையாற்றும் முறுக்கண்டி முகாமைச் சேர்ந்த 39 வயதான சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்ற ராணுவ அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த விபத்தில் மேலும் 09 இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.