விவிபேட் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோடு விவிபேட் கருவிகளில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண கோரி வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வாக்கு இயந்திரத்துடன் விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணையின் போது நீதிபதிகள், வாக்கு இயந்திரங்கள் குறித்து எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், அனைத்து சிறிய கட்டுப்பாட்டு கருவிகளும் ஒரு முறை மட்டுமே புரோகிராம் செய்ய முடியும் என்றும், விவிபேட், இவிஎம், கண்ட்ரோலர் ஆகிய மூன்றும் தனித்தனியாக புரோகிராம் செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்தலுக்கு பிறகு மூன்று யூனிட்களுமே சீலிட்டு வைக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். இதனையடுத்து, தொழில்நுட்பம் சார்ந்த விவகாரங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என கூறிய நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதிவாகும் வாக்குகளோடு 100 சதவீத ஒப்புகை சீட்டுகளை சரிப்பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள் வாக்கு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலர்களில் உள்ள தகவல்களை கேட்டால் தேர்தல் முடிவுக்கு பின் சரிபார்க்கலாம் என்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து சரிபார்க்கலாம் அதற்கான முழு செலவையும் கோரிக்கை விடுக்கும் வேட்பாளரே ஏற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், விவிபேட்டில் சின்னங்களை பதிவேற்றியதும் சீல் செய்ய வேண்டும், தேர்தல் முடிந்த பின் 45 நாட்களாவது சீல் செய்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலதிக செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு பரந்துபட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ரணில்! – பஸில் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுடன் முதல் சந்திப்பு.

26 இலட்சம் பண மோசடி காரணமாக கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு சீல்!

மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டம் “ஆபரேஷன் மெனாய் பாலம்” தயாராகிறது

மத்தளை விமான நிலையம் , இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு…

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார் – சந்தேக நபர்களின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் இதோ!

சன்னஸ்கலவை கைது செய்தமைக்கு பொலிஸார் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.

மாங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த 20 வயதுடைய இளைஞர் கைது.

காசாவின் உள்ள ரபா நகரில், தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு !

Leave A Reply

Your email address will not be published.