தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணன் முற்றாக வெளியேற்றம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து மணிவண்ணன்
முற்றாக வெளியேற்றம்; தேசிய அமைப்பாளரானார் சுரேஷ்!

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதிய தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஷ் கட்சியின் மத்திய குழுவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும் மத்திய குழுவால் நீக்கப்பட்டுள்ளார் எனவும் கஜேந்திரகுமார் எம்.பி. மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.