ஆசிரியர் பயிற்றுனர்கள் அடையாள வேலை நிறுத்தம்.

தேசிய கல்வி முறைமையில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் முன்னணி சேவையான ஆசிரியர் கல்வியாளர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக ஏப்ரல் இருபத்து ஒன்பது மற்றும் முப்பதாம் திகதிகளில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடாத்தவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் கல்வி சேவை உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளதுடன், மே இரண்டு மற்றும் மூன்றாம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் தொழில் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.