சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி நாளை இரண்டு பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணி நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதில் முதலில் கலந்துகொள்ள உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவுள்ளதுடன் பெருந்தோட்ட மக்களின் பெருந்தொகையான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தின பேரணியும் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (01) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு மாளிகாவத்தை பொலிஸாருக்கு முன்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த அமைப்புக்கள் உட்பட பெருந்தொகையான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.