இந்தோ பசிபிக் பிராந்திய இயக்குனருக்கும் NPP தலைவருக்கும் இடையே சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜே.வி.பி.தலைமை அலுவலகத்தில் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றது.

இச்சந்திப்புக்காக, ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைத் தலைவர் ஹுமைரா ஹதியா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் மற்றும் முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை, பிராந்திய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.