மருதானையில் ரயில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

ரயிலில் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மருதானைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் (08) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மருதானை ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக அவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.