படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி உறுதி!

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை கிடைப்பதை இண்டியா கூட்டணி அரசு உறுதி செய்யும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் புல்பூர் பகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி “இன்று அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற போராட்டம் நடக்கிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அழிக்க நினைக்கிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை கிடைப்பதை இண்டியா கூட்டணி அரசு உறுதி செய்யும்.

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.

ராணுவத்தில் மீண்டும் பழைய முறைப்படி ஆள்சேர்ப்பு நடைபெறும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி: மீட்புப் பணியில் சிக்கல் (Video)

SJBயுடன் விவாதங்களுக்கு வர முடியாது என NPP அறிவித்தது

வழக்காளியுடன் சுமுகத் தீர்வுக்கு இணக்கப் பேச்சு நடத்துங்கள்! – தமிழரசின் மத்திய குழு வழிகாட்டல்.

ஆளும் – எதிரணி எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.கவுடன் இணைவு?

மும்முனை விவாதமே வேண்டும்! – டிலான் வலியுறுத்து.

தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டம்: தமிழரசுக் கட்சி இணங்கவில்லை! – மத்திய குழு வேறு விதமாக முடிவு.

ஆம் ஆத்மி தலைவர் கைது நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் பரபரப்பு; ஊரடங்கு அமல்.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான துபாய் ஊடக விசாரணையில் சிங்கப்பூர் சந்தேக நபர்களின் பெயர்கள்.

ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து?

ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது: மோடி

சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு; குழந்தை உட்பட 5 பேர் படுகாயம் – பரபர சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.