விஜயகாந்த் மனைவிக்கும் கொரணா தொற்று உறுதி.

தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்தின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஏற்கனவே செப்டம்பர் 22 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவா் நந்தம்பாக்கத்தில் உள்ள மியோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது மனைவியும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுகுள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் அவருடைய  துணைவியாரும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்ச் செல்வம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.