தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்புக்கு 3 IT வளாகங்கள்.

உலகில் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் கல்வி மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என “D.P.Education IT”யினது ஸ்தாபகரும் தலைவருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்..

இலங்கை முழுவதும் இயங்கும் “D.P.Education IT”. வளாகம்” திட்டத்தின் கீழ் மேலும் 03 ஐ.டி. வளாகங்களை நேற்று (20) மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களின் பாவனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாடும் கல்வியால்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. கல்வியால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை புரிந்து கொண்டேன். அதனால்தான் எனது தனிப்பட்ட செல்வத்தை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க செலவிடுகிறேன். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கல்வியின் தூணிலிருந்து மீட்டெடுக்க முடியும்.

தொழில்முனைபவரான தம்மிக்க பெரேரா குறிப்பிடுவது போல், வறுமையை ஒழிக்கக்கூடிய ஒரே தடுப்பூசி கல்விதான்.

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம், வறுமையை எந்த நேரத்திலும் ஒழிக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

“கல்வியில் பணக்காரர்களாக இருக்கும் எந்த குடும்பமும் ஏழை இல்லை. ஏனென்றால் நீங்கள் சரியான கல்வியைப் பெற்றிருந்தால், அந்தக் கல்வியில் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. இலங்கையில் சமமாக கற்கக்கூடிய இடமாக “D.P.Education IT” இருக்கிறது என்றால். அந்த கல்வி அம்மா அல்லது அப்பாவின் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால், அனைத்துப் பாடங்கள் தொடர்பான போதனைகளும் “D.P.Education IT” கல்வி பயன்பாட்டில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் “D.P.Education IT”, இலங்கையில் வளாகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தின் கீழ் கணனி பாடநெறி ஒன்றின் பெறுமதி 25 இலட்சம் ரூபாவாகும் மற்றும் அதனை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கு DP கல்வியின் ஸ்தாபகரும் தலைவருமான தம்மிக்க பெரேரா செயற்பட்டு வருகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திலும், ஏறாவூர் நகரிலும், புதிய காத்தான்குடி நகரிலும் “D.P.Education IT”க்கான 3 கல்வி நிலையங்கள் நேற்று (20) உத்தியோகபூர்வமாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அந்த நிலையங்களில் சுமார் 2800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டி.பி. கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் எம்.எம்.எஸ்.ஹாரூன், ஏ.எஸ்.எம்.ஷாதிக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.