இலங்கையில் அதிகமாக சிம் அட்டைகள் வாங்க முடியாது- பாதுகாப்பு அமைச்சு.

ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் இணைத்து பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் வைக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு நபர்களின் பெயரில் மொபைல் போன் சிம்களை வாங்குவதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.