கொரணா தொற்றால் பிற்போடப்பட்டன பரீட்சைகள்!

பிற்போடப்பட்டன பரீட்சைகள்!

“கொரோனா வைரஸ் தொற்றால் கம்பஹா மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை ஆகிவற்றை ஒத்திவைக்க அரசு தீர்மானித்துள்ளது.”

– இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் அனுஷா கொனுகுல தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என்றும், பகுதி நேர வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

இந்தநிலையில், பரீட்சைகளை மீள நடத்துவதற்கான திகதிகள் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்படும் என அனுஷா கொனுகுல கூறினார்.

இருப்பினும், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகள் தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11ஆம் திகதியும், ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியிலிருந்து நவம்பர் 06 ஆம் திகதி வரை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.