நாடு முழுவதும் விழாக்கள் ஒன்றுகூடல்களுக்கு தடை.

நாடு முழுவதும் விழாக்கள்
ஒன்றுகூடல்களுக்கு தடை

– சுகாதார அமைச்சு உத்தரவு

இலங்கையில் மறு அறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.சிறிதரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலையைக் கருத்தில் எடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.