கட்டுநாயக்க விமான நிலைய ஊழியருக்கும் கொரோனா.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியருக்கும் கொரோனா! சற்றுமுன்னர் வெளியான தகவல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரவுப் பணிப்பெண் ஊழியர் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் அதிகளவான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

இதற்கிடையில் சற்று முன்னர் கம்பஹாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் துப்புரவுப் பணிப்பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரி சந்திக பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.