மாவட்ட செயலக புதிய வரவேற்பு கருமபீடம் திறந்து வைப்பு.

மாவட்ட செயலக புதிய வரவேற்புகருமபீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதான நுளைவாயிலில் அமைக்கப்பட்ட வரவேற்பு கருமபீட அங்குரார்ப்பண நிகழ்வானது மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(07) மு.ப 08.30மணிக்கு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர். ரூபாவதி கேதீஸ்வரன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமானது அவருடைய பங்குபற்றுதலுடன் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 சுகாதார நடைமுறைகள் காரணமாக மிகஎளிமையான முறையில் இந்நிகழ்வானது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.