மேலும் 124 பேருக்கு   கொரோனாத் தொற்று.

மேலும்  124 பேருக்கு
கொரோனாத் தொற்று

இலங்கையில் இன்று 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்களில் 51 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியயர்கள் எனவும், ஏனைய 73 பேர் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து கொரோனாவின் மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,310 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. அதில் 3 ஆயிரத்து 307 பேர் குணமடைந்துள்ளனர். 1,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.