மன்னார் பொது வைத்தியசாலையில் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் பொது வைத்திய சாலையில் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர் தின நிகழ்வானது கடந்த 01-10-2020 அன்று வைத்தியசாலை வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் வைத்தியசாலையில் பணிபரியும் பணியாளர்களின் பிள்ளைகள் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களுக்கான போட்டிகளும், பரிசுகளும், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு கலைநிகழ்வுகழுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இவ்வருடத் திருவிழாத் திருப்பலி மிகவும் பக்தியாகவும் ஆசீர்வாதம் நிறைந்ததாகவும் கொண்டாடப்பட்டது.விசேட விதமாக தொடர்ச்சியாக நான்கு நாட்கள் குணமாக்கல் வழிபாடும் நற்கருனணை ஆசீர்வாதமும் அருட்பணி ரவ்பாயல் அடிகளாரால் நடாத்தப்பட்டது இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட பலர் உடல் உள நோயில் இருந்து விடுதலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குருக்கள் துறவிகள் தங்குவதற்கான வதிவிட அறைகளும் கலாச்சார மண்டபமும் ஆயர் அவர்களால் 06-09-2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.

அர்ப்பணிப்போடு செயற்படும் மன்னார் பொது வைத்தியசாலையின் ஆன்மீகக் குரு அருட்பணி. யேசுபாலன் அடிகளாருக்கு மன்னார் மறைமாவட்டம் சார்பாக வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து மகிழ்கின்றோம்

Leave A Reply

Your email address will not be published.