கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள் (71 ஆண் 304 பெண்) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.

கோப்பாய் தேசியக் கல்லூரி கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை தமது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்து வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

சுமார் எட்டு பேருந்துகளில் மாணவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் அத்தோடு குறித்த கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றும் முகமாக ராணுவத்தினரால் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் வவுனியா தேசிய கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.